திருபுவனை தொகுதியில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என, கோபிகா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் அவர் பேசியதாவது: திருபுவனை தொகுதியில் புதிதாக மதுக் கடைகளைத் திறக்க தனியாருக்கு உரிமம் தரப்படுகிறது. குடியிருப்புகள், பள்ளிகள்,
வழிபாட்டுத் தலங்கள் உள்ள பகுதிகளில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது.
இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் மாணவர்கள் தோல்வியடைவது குறித்து பேரவையில் பேசும் நீங்கள், ஏன் மதுக் கடைகள் திறக்க உரிமம் தருவது குறித்து பேசுவதில்லை? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் அவர்.