மதுப் பழக்கத்தைக் கண்டித்ததால் கணவர் தற்கொலை

மதுப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால், கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மதுப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால், கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் திருக்காஞ்சி திலகர் நகரைச் சேர்ந்தவர் சுதாகரன் (35). இவர், கடலூரில் தையல் இயந்திரங்களைச் சரி பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரது மதுப் பழக்கத்தால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். ஆனாலும், சுதாகரன் மதுப் பழக்கத்தைக் கைவிடவில்லை.
இந்த நிலையில், வியாழக்கிழமை மது அருந்திவிட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கணவரைக் கண்டித்துவிட்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால், மனமுடைந்த சுதாகரன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மங்கலம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com