குழந்தைகள் தினத்தையொட்டி, ஆச்சார்யா ஏகலைவா சர்வதேசப் பள்ளி, கலக ஐடியாஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படுகிறது என ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குநர் ஜெ.அரவிந்தன் தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்களும் குழந்தைகள் தினத்தன்று தொடங்கும் இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்கவும், இந்தத் திரைப்படங்களைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25 நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றன.
14.11.2017 முதல் 18.11.2017 வரை பிற்பகல் 3.30 மணி, இரவு 7.00 மணி காட்சிகளும், 19.11.2017 அன்று காலை 11.00 மணி, இரவு 7.00 மணி காட்சிகளையும் ரூ.10/- செலுத்தி யார் வேண்டுமானலும் கண்டுகளிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 9442599024 / 9442255186- என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.