8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

2018 ஜனவரியில் நடைபெறவுள்ள 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் வ.ரங்கநாதன் தெரிவித்தார்.

2018 ஜனவரியில் நடைபெறவுள்ள 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் வ.ரங்கநாதன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பங்களை 15.11.17 முதல் 25.11.17 வரையிலான நாள்களில் (விடுமுறை தவிர) புதுச்சேரி சோலை நகர், முத்தியால்பேட்டில் அமைந்துள்ள அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப் பள்ளி முதல்வரை அணுகி விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதவி செய்து கொள்ளலாம்.
 விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ. 125 (அனைத்துப் பாடங்களுக்கும் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175-ஐ பணமாக செலுத்த வேண்டும். மேலும், ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட உறை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
 ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com