அரசு பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கோரிமேட்டில் உள்ள இந்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவரல்லாத ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் காலத்தோடு வழங்கப்படாத நிலை உள்ளது.
 இந்த நிலையில், மாத ஊதியத்தை காலத்தோடு வழங்க வேண்டும், 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்து தர்னா நடத்தினர்.
 அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com