ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பாரத பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா அரசு செய்தி விளம்பரத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கடற்கரைச் சாலையில் உள்ள நேருவின் உருவச்சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த நேருவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.