வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்

வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி சட்டப்பேரவை அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி சட்டப்பேரவை அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் புதுவை அரசு சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. சட்டப்பேரவை எதிரே உள்ள பாரதி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல, திமுக எம்.எல்.ஏ. சிவா மற்றும் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிதம்பரனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், புதிய நீதிக்கட்சி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com