ஜிப்மரில் தூய்மைத் திட்ட விழிப்புணர்வுப் பேரணி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சிறப்பு தூய்மைத் திட்ட விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சிறப்பு தூய்மைத் திட்ட விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, ஜிப்மர் வளாகத்தில் சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி அக்டோபர்
 5 -ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மைக் கொண்டாட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.
 அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஜிப்மர் வளாகத்தில் தொடங்கிய மாணவர்களின் பேரணியை இயக்குநர் எஸ்.சி.பரிஜா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம் , சுத்தம் சுகாதாரம் தரும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியும் , தூய்மையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் சென்றனர்.
 இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலச்சந்தர், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் அம்ரோஸ், மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com