பிஎஸ்என்எல் துணைக் கோபுர நிறுவனத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மாலை தலைமைப் பொது மேலாளர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைக் கோபுர நிறுவனம் என்ற பெயரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழிக்கக்கூடாது, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், நியாயமான கோரிக்கைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.சுப்பிரமணியன், செல்வராகவன் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் ஹரிதாஸ், சங்கரன், தண்டபாணி உள்பட ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.