புதுவை மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம், சட்டம்-ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சந்திரன், கடந்த சில நாள்களுக்கு முன்பு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து புதுவை மாநில நிர்வாகப் பிரிவு டிஐஜியாக சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இதேபோல, தில்லியில் இருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யபட்ட ஆல்வா காரைக்கால் மாவட்ட சட்டம்-ஒழுங்கு முதுநிலை காவல்கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி குற்றம்-புலனாய்வு பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக மகேஷ்பன்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக உத்தரவை தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் பிறப்பித்துள்ளார்.