மாநில அந்தஸ்து பெறுவதுதான் இலக்கு: ரங்கசாமி

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்.ஆர். காங்கிரஸின் இலக்கு என்று அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி தெரிவித்தார்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்.ஆர். காங்கிரஸின் இலக்கு என்று அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி தெரிவித்தார்.
 அந்தக் கட்சியின் 8-ஆவது ஆண்டு தொடக்க விழா, புதுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பங்கேற்று கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கிய ரங்கசாமி தேசியத் தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 2011-இல் தொடங்கப்பட்ட என்.ஆர். காங்கிரஸ் புதுவையில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை அளித்தது. தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வருகிறோம்.
 கட்சியின் செயல்பாடுகள் மாநில வளர்ச்சிக்காகவே இருக்கும். என்.ஆர். காங்கிரஸின் முக்கிய இலக்கு மற்றும் கொள்கை மாநில அந்தஸ்து பெறுவதுதான். மக்களின் ஆசி மற்றும் ஆதரவோடு மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்.
 கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். எங்களது மக்களவைத் தொகுதி உறுப்பினர் எந்தக் கட்சியுடன் இணைந்து பணிபுரிகிறார் என்பதும் தெரியும்.
 தொகுதி வாரியாக உறுப்பினர்களைச் சேர்க்க கவனம் செலுத்தி வருகிறோம். பிரதமர் மோடி ஆரோவில் வரும்போது நிச்சயமாக சந்திப்பேன் என்றார் அவர். நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரவைத் தலைவர் சபாபதி, முன்னாள்அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏக்கள் டி.பி.ஆர்.செல்வம், அசோக் ஆனந்த், என்எஸ்ஜே.ஜெயபால், சுகுமார், திருமுருகன், சந்திரபிரியங்கா, கோபிகா, பொருளாளர் வேல்முருகன் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com