புதுச்சேரியில் பந்தய புறாக்கள் திருடுபோனது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, தேங்காய்திட்டு வெற்றி விநாயகர் நகரைச் சேர்ந்தவர் புவனேஷ் (32). உயர் ரக புறாக்களை வளர்த்து வருகிறார். இந்தப் புறாக்களை அவர் பந்தயத்துக்கு விடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை புறாக்களுக்கு தீனி போடுவதற்காக வந்தார். அப்போது புறாக் கூண்டுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் புறாக்களை எண்ணியபோது 10 புறாக்கள் குறைந்ததை அறிந்தார். தனது புறாக்கள் திருடுபோனதாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து உதவி ஆய்வாளர் ராஜன் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.