மறைந்த அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த தினத்தையொட்டி, புதுவை மாநில அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலச் செயலாளர் புருசோத்தமன் தலைமை வகித்தார். அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் ஆ.பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: ஜெயலலிதாவின் பிறந்த நாளை புதுவை மாநில அதிமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
கோயில்களில் சிறப்பு வழிபாடு, தர்க்கா மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்துவது மற்றும் அன்னதானம் செய்வது, பல்வேறு நல உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் தனிக் கூட்டம்
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்.சக்திசேகர் தலைமையில் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், புதுச்சேரி நகரில் முக்கிய சந்திப்பில் ஜெயலலிதா உருவச் சிலையை திறக்க வேண்டும், அவரது பிறந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகளை வழங்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.