புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் அமர்வதற்காக சுமார் ரூ. 8 லட்சம் செலவில் திறந்த இடத்தில் மேற் கூரைஅமைக்கப்பட்டுள்ளது.
கோதிஅறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட இந்த மேற்கூரையை ஜிப்மர் இயக்குநர் எஸ்.விவேகானந்தம் நோயாளிகள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்து வைத்தார். இதற்கு முன்பு இந்த கோதிஅறக்கட்டளை மூலம் ஜிப்மர் மண்டல புற்று நோய் மையம் அருகே நீர்நிலையம் அமைக்கப்பட்டு கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் வெந்நீர் மற்றும் குளிர்ந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.