மழை வேண்டி வருண ஜபம்

விழுப்புரத்தில் மழைவேண்டி ஆஞ்சநேயர் கோயில் குளத்தில் வருண ஜபம் மற்றும் வேள்வி சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் மழைவேண்டி ஆஞ்சநேயர் கோயில் குளத்தில் வருண ஜபம் மற்றும் வேள்வி சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் சங்கரமடம், ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகம் சார்பில், உளுந்தூர்பேட்டை ராஜகோபால் சாஸ்திரிகள் தலைமையில் வேதவிற்பன்னர்கள் 5 பேர் குளத்தில் இறங்கி மழை வேண்டி வருண ஜபம் நடத்தினர். தொடர்ந்து, வருண யாகத்தையும் அவர்கள் மேற்கொண்டனர்.
இந்த வருண ஜபம் காலை 7 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.
பிராமணர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரன், அனந்தராமன், ராஜாராம், நடராஜன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com