திருக்கோவிலூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.
 திருக்கோவிலூரை அடுத்த கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் மகன் ராமு (48) (படம்). விவசாயி. இவர், வியாழக்கிழமை இரவு தனது நிலத்தில் ஈசல் பிடிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் என்பவரது நிலத்தில் குத்தகைக்கு மணிலா பயிரிட்டுள்ள குமார் , காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அனுமதியின்றி அமைத்திருந்த மின்வேலியில் ராமு சிக்கி உயிரிழந்தார்.
 தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீஸார், நிகழ்விடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து சடலத்தைக் கைப்பற்றி, உடல் கூறு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com