உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து பெண் காயமடைந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் பகுதியில் புதன்கிழமை இரவு ஒரு மணி முதல் 3 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த ராஜேந்திரன் மனைவி தெய்வானை(45) என்பவர் மின்னல் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எடைக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.