8 வயதுச் சிறுவன் கொன்று புதைப்பு: தந்தை கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 வயதுச் சிறுவனைக் கொன்று புதைத்ததாக, அவரது தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 வயதுச் சிறுவனைக் கொன்று புதைத்ததாக, அவரது தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
 திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலுசாமி (37). இவர் கர்நாடக மாநிலத்துக்கு வேலைக்கு சென்ற போது, அங்கு திருமணமான ரத்னா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ரத்னாவுக்கு அப்பு உள்பட 3 குழந்தைகள் இருந்தனர்.
 பாலுசாமியுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு, ரத்னா தனது கணவரைப் பிரிந்தார். ரத்னாவுக்குக்கும், பாலுசாமிக்கும் 2 குழந்தைகள் பிறந்தனர். பாலுசாமி பெங்களூரிலேயே உணவகத்தில் பணியாற்றிக் கொண்டு, குடும்பத்துடன் வசித்து வந்தார்.
 ரத்னாவுக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த மகனான அப்புவை (8) அழைத்துக் கொண்டு, டி.எடையாருக்கு பாலுசாமி திங்கள்கிழமை புறப்பட்டு வந்தார். டி.எடையார் அருகேயுள்ள கோரையாற்றுக்கு பாலுசாமி அப்புவை செவ்வாய்க்கிழமை குளிக்க அழைத்துச் சென்றார். வெகுநேரத்துக்குப் பிறகு, பாலுசாமி மட்டும் வீட்டுக்குத் திரும்பினார்.
 இதனால் சந்தேமகமடைந்த உறவினர்கள் அப்புவை எங்கே? எனக் கேட்டனர். அப்புவை அடித்துக் கொலை செய்து ஆற்றில் புதைத்து விட்டதாகக் கூறிய பாலுசாமி, தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காட்டிக் கொண்டாராம்.
 இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை அழைத்துக் கொண்டு கோரையாற்றுக்குச் சென்று பார்த்தனர். அங்கு, அப்புவை புதைத்ததாக பாலுசாமி கூறிய இடத்தில் தோண்டினர். அதில் அப்பு சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது.
 தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் விரைந்து வந்து அப்புவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீஸார் பாலுசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com