கந்து வட்டி பிரச்னை: ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே கந்துவட்டிப் பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே கந்துவட்டிப் பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 கள்ளக்குறிச்சியை அடுத்த வடதொரசலூரைச் சேர்ந்தவர் முருகவேல் (43).
 இவர், பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த ராதா(எ)ராதாகிருஷ்ணன் (38) என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1லட்சம் பணதை வட்டிக்கு வாங்கினாராம். அதற்கு ஜாமீன் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்ததாக தெரிகிறது.
 5 மாதம் கழித்து வட்டியுடன் கடன் தொகையை கொடுத்து விட்டு, ஆவணங்களை கேட்ட முருகவேலிடம் ராதாகிருஷ்ணன் ரூ.3 லட்சம் கூடுதலாக தர வேண்டும் எனக் கூறி, முருகவேலின் கார் சாவியை பிடுங்கிக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
 இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com