மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவப்படத்தை, ஓவிய ஆசிரியர் ஒருவர், கண் இமையில் வரைந்து சாதனை புரிந்தார்.
திருக்கோவிலூரை அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பகுதிநேர கலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார், மணலூர்பேட்டையைச் சேர்ந்த சு.செல்வம்.
இவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது உருவப் படத்தை தன் வலது கண் இமையில் வரைந்து சாதனை புரிந்தார்.
இந்தப் படத்தை வரைய 15 நிமிஷங்கள் எடுத்துக்கொண்ட ஓவியர் சு.செல்வம், அதுவரை தன் கண் இமையை இமைக்காமல், நீர் வண்ணத்தைக் கொண்டு வரைந்தது, அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது.