மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கண்டமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்டமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கழித்திராம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கி, லாரி ஓட்டுநரிடம் விசாரித்தனர்.
 விசாரணையில், அவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுகுமார் (36) என்பதும், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
 இதே போல பக்கிரிப்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கண்டமங்கலம் பாண்டுரங்கன் மகன் செல்வராஜை (33) போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com