ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் முகாமை தொடக்கிவைத்தார். பின்னர், ரத்த தானம் செய்த இளைஞர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
வட்டார மருத்துவ அலுவலர் வெற்றிவேல்முருகன் தலைமையிலான மருத்துவ அலுவலர்கள் கே.சுகன்யா, வசுமதி, சுகந்தி, எம்.நிரஞ்சனா ஆகியோர் முகாமை முன்னின்று நடத்தினர்.