80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து, 80 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து, 80 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
 விக்கிரவாண்டி அருகே நெடிமொழியனூரைச் சேர்ந்தவர் கண்டீபன் (80). வயது முதிர்ந்த இவர் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் அவதியடைந்து வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டில் இருந்த கண்டீபன் மனமுடைந்து, பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், மயங்கிய அவரை, உறவினர்கள் மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு, அன்றிரவு உயிரிழந்தார். பெரியதச்சூர் உதவி காவல் ஆய்வாளர் விவேகானந்தன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com