சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சவூதி அரேபியாவில் உள்ள டையாவரம் தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி, டிப்ளமோ தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற 150 ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.55ஆயிரம் மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான பயணச்சீட்டு, உணவு, மருத்துவக் காப்பீடு முதலியவை வழங்கப்படும்.
நேர்முகத்தேர்வு சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் வரும் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், பெங்களுரில் இன்பேன்டரி சாலையில் உள்ள மோனார்க் லக்சர் என்ற ஹோட்டலில் வரும் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் காலை 9 மணி முதல் நடைபெறும்.
விருப்பமும் தகுதியும் உள்ள ஹீமோடயாலிசிஸ் செவிலியர்கள் மே 19-ஆம் தேதிக்குள் omceq049@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044- 22505886, 22502267, 22500417, 8220634389 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் தெரிவித்துள்ளார் என அதில் குறிப்பிடப்பட்
டுள்ளது.