திருக்கோவிலூர் அருகே பிரதான சாலையில் மரம் சாய்ந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சில இடங்களில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது.
இதில், திருக்கோவிலூர்-சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வாணாபுரம் கிராம எல்லையில் மரம் சாலையில் சாய்ந்தது. இதனால், அவ்வழியாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.