விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்காக நாளை விமானப் படை ஆள்சேர்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்காக, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மே 20 முதல் இரு தினங்கள் நடைபெறுகின்றன.

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்காக, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மே 20 முதல் இரு தினங்கள் நடைபெறுகின்றன.
 இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம், திருச்சிராப்பள்ளி ரேஸ் கோர்ஸ் சாலை அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.
 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு நான்கு நாள்கள் இத்தேர்வு முகாம் நடைபெற உள்ளது.
 இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மே 20, 21 ஆகிய இரண்டு நாள்களில் விமானப் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
 தகுதியும், விருப்பமும் உள்ள விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள், இம்முகாமில் பங்கேற்று, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com