மினி லாரி மோதியதில் தொழிலாளி சாவு

கிளியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார்.

கிளியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார்.
திண்டிவனம் அருகே உள்ள கிளியனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் புஷ்பராஜ்(35). கூலித் தொழிலாளி. இவர், வியாழக்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பரான காளி மகன் பழனியுடன்(40) மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
திண்டிவனம்-புதுவை நெடுஞ்சாலையில் தைலாபுரம் தோட்டம் அருகே சாலை வளைவில் வந்தபோது, எதிரே புதுச்சேரி நோக்கி வந்த மினி லாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயமடைந்தனர்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புஷ்பராஜ் வெள்ளிக்கிழமை இறந்தார். கிளியனூர் போலீஸார் மினி லாரி ஓட்டுநர் செல்வதுரை (34) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com