காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

விக்கிரவாண்டி அருகே காவல் பயிற்சி உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரவாண்டி அருகே காவல் பயிற்சி உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் அருகே நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (30). விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் இவர், வியாழக்கிழமை இரவு கப்பியாம்புலியூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேரை பயிற்சி உதவி ஆய்வாளர் பிரபு எச்சரித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் 4 பேரும், அவர்களது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து, பிரபுவை தகாத வார்த்தையால் திட்டி கையால் தாக்கினராம். உடனே, அவர்கள் 7 பேரையும் உணவக ஊழியர்கள், பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். இதில், 4 பேர் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி விட்டனர். மற்ற 3 பேர் பிடிபட்டனர்.
பிடிபட்டவர்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை விருதுவிளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த மரியலூயிஸ் (34), பிரகாஷ்(30), லியோ பிரான்சிஸ் (25) ஆகியோர் எனத் தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com