சாலை விபத்தில் பலியான இருவர் அடையாளம் தெரிந்தது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வியாழக்கிழமை இரவு நின்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அவர்கள்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வியாழக்கிழமை இரவு நின்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரிய வந்தது.
சென்னை கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர்கள் வினோத் (29), முத்துக்குமார் (38). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர்கள் இருவரும் மரக்காணம் அருகே கீழ்ப்பேட்டையைச் சேர்ந்த தனது நண்பரான சதீஷ் (25) என்பவரை பார்க்க வியாழக்கிழமை காலை பைக்கில் வந்தனர். அங்கிருந்து, புதுச்சேரிக்கு சென்று அப்பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது, கிழக்கு கடற்கரைச் சாலையில் அவர்கள் மூன்று பேரும் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வியாழக்கிழமை இரவு கோட்டக்குப்பம் அருகே அனிச்சம்குப்பம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த வினோத், முத்துக்குமார் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சதீஷ் பலத்த காயமடைந்தார்.  கோட்டக்குப்பம் போலீஸார் விரைந்து சென்று சதீஷை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். வினோத், முத்துக்குமார் ஆகிய இருவரின் சடலங்களும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள், காயமடைந்தவரின் விவரம் வியாழக்கிழமை இரவு உடனடியாகத் தெரியவில்லை. பின்னர், போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com