இலவச கண் சிகிச்சை முகாம்

உளுந்தூர்பேட்டை எல்.ஐ.சி கிளையும், அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து உளுந்தூர்பேட்டையில் ஏழை, எளிய மக்களுக்கான இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை

உளுந்தூர்பேட்டை எல்.ஐ.சி கிளையும், அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து உளுந்தூர்பேட்டையில் ஏழை, எளிய மக்களுக்கான இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின .
எல்.ஐ.சி. உளுந்தூர்பேட்டை கிளை மேலாளர் எம்.ரமேஷ்குமார் தலைமை வகித்து, முகாமை தொடக்கி வைத்தார். விழுப்புரம் அகர்வால் கண் மருத்துவ மனையின் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து, மேல் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கினர். நிர்வாக அலுவலர் என்.தனஜெயன், வளர்ச்சி அதிகாரிகள் ஏ.வேல்முருகன், கே.விஜயகுமார், எஸ்.மோகன், ஆர்.வேலப்பன், அலுவலக உதவியாளர் எஸ்.ஏழுமலை ஆகியோர் முகாமுக்கான உதவிகளை செய்தனர். முகாமில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். அதில் 10 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com