விழுப்புரத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கம் சார்பில் அறிமுகக் கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயக்க நிறுவனர் சையத் பஷீர் தலைமை வகித்தார். நெல்லை மாவட்டத் தலைவர் கலைமணி, திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊழலை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சட்டம் குறித்து பொதுமக்கல் அறிதல் குறித்தும் கூட்டத்தில் பேசினர்.