செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பி.எட் , நர்சிங் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செஞ்சி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு செஞ்சி சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜாராமன் தலைமை வகித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்ட விதிகள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி தொகுதி எம்எல்ஏ செஞ்சி மஸ்தான், ஸ்ரீ ரங்கபூபதி கல்லூரித் தலைவர் ஆர்.பூபதி, கல்லூரிச் செயலர் ஸ்ரீபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பார்அசோசியேஷன் தலைவர் என்.கண்ணதாசன், வழக்குரைஞர் வி.சக்திராஜன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், முதல்வர்கள், பேராசிரியர்கள், கலந்து கொண்டனர்.