விழுப்புரம்
விவசாயி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
திண்டிவனம் அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடு போனது.
திண்டிவனம் அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடு போனது.
சிறுவாடி கிராமத்தை சேர்ந்தவர் மணி (60), விவசாயி. இவர், வீட்டை பூட்டிவிட்டு மனைவி ராஜவேணியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அண்மையில் சென்றார்.
இந்த நிலையில், தனது வீடு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அவர் ஊர் திரும்பினார். கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்திருந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.