சங்கராபுரத்தில் ஸ்டார் கிளப் சார்பில் வீட்டுக்கொரு மரக்கன்று வழங்கும் பசுமை நட்சத்திரத் திட்ட தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பசுமை நட்சத்திரத் திட்டத் தலைவர் பிலால் தலைமை வகித்தார். ஸ்டார் கிளப் தலைவர் காதர் முன்னிலை வகித்தார். செயலர் இனாயத்துல்லா வரவேற்றார்.
விழாவில் ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் முகமத்ரபி, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், தானி (ஆட்டோ) சங்கத் தலைவர் இராமு ஆகியோர் மரம் நடுவதன் அவசியம் குறித்துப் பேசினர்.
தொடர்ந்து, காட்டுவன்னஞ்சூர் பகுதியில் வீட்டுக்கொரு மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. ஈத்கா பள்ளிவாசல் பகுதியில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், ரோட்டரி கிளப் மூர்த்தி, தொழில் பயிற்சிப் பள்ளி காப்பாளர் கவாஸ்கர், ஜமாத் தலைவர் அஜீஸ், செயலர் பஷீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஸ்டார் கிளப் பொருளாளர் முகமத்கவுஸ் நன்றி கூறினார்.