கண்டமங்கலம் அருகே மணல் கடத்திச் சென்ற லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, அமணங்குப்பம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த லாரியை சோதனையிட முயன்றபோது, லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
விசாரணையில், திருட்டுத்தனமாக அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.