மணலூர்பேட்டை சரஸ்வதி மழலையர் தொடக்கப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பொது சுகாதார நோய்த் தடுப்பு மருந்துத் துறை, மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணலூர்பேட்டை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து முகாமை நடத்தின.
முகாமுக்கு, பள்ளி நிர்வாகி பத்மாகபூர் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் இப்ராஹிம் வரவேற்றார். சுகாதார நிலைய மருத்துவர் பாலமுருகன் முகாமை தொடக்கி வைத்தார்.
முகாமில் அரிமா சங்க ஆலோசகர் ச.குழந்தைவேலு, அரிமா முன்னாள் தலைவர் முருகன், பள்ளிச் செயலர் அப்சல் இப்ராஹிம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினர். சுகாதார ஆய்வாளர் ராதா, அரிமா சங்க உறுப்பினர் குணலட்சுமி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.