உளுந்தூர்பேட்டையில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 111-ஆவது பிறந்த நாள் விழா வாரியாரின் ஆன்மிக சேவா அறக்கட்டளை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் கல்லை கி.கதிரவன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். விழாவில், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் என்.வீரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். பிராமணர் நலச் சங்க நகர இணைச் செயலர் எம்.நாகசாமி நன்றி கூறினார்.