அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் அதிமுக, திமுக, தேமுதிகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் அதிமுக, திமுக, தேமுதிகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.
 விழுப்புரத்தில், திமுக சார்பில் மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி தலைமையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து, அக்கட்சியினர் ஊர்வலமாகப் புறப்பட்டு கலைஞர் அறிவாலயம் வரை சென்றனர்.
 தொடர்ந்து, அங்குள்ள அண்ணாசிலைக்கு க.பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 மாவட்ட அவைத் தலைவர் கு.ராதாமணி, மாவட்டப் பொருளாளர் ந.புகழேந்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், மாவட்ட துணைச் செயலர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், ஒன்றியச் செயலர்கள் மும்மூர்த்தி, பிரபாகரன், ராஜா, நகர அவைத் தலைவர் சக்கரை, இளைஞரணி அமைப்பாளர் தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 அதிமுக: அதிமுக சார்பில் வடக்கு மாவட்டச் செயலர் இரா.லட்சுமணன் தலைமையில், அக்கட்சியினர் ஊர்வலமாகச் சென்று அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 எம்.பி. ராஜேந்திரன், நகரச் செயலர் ஜி.பாஸ்கரன், ஒன்றியச் செயலர்கள் ராமதாஸ், ராஜேந்திரன், நகர அவைத் தலைவர் அன்பழகன், நகர துணைச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் செங்குட்டுவன், ராம.சரவணன், சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 தேமுதிக: தேமுதிக சார்பில் நகரச் செயலர் மணிகண்டன் தலைமையில், விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 நகர அவைத் தலைவர் சிவா, நகர பொருளாளர் சுபாஷ், அவைத் தலைவர் ஆர்பி.முருகன், துணைச் செயலர் சீனு, மாவட்ட இளைஞரணி பிரபு, தொண்டரணி சிவா, நகர துணைச் செயலர்கள் சூரியகண்ணன், துர்கா ரகு, செந்தில், அனுராஜா, வடிவேலு, மாணவரணி உதயா
 உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
 வானூரில்...வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, சக்கரபாணி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 முன்னதாக, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. வானூர் ஒன்றியச் செயலர் சதீஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள், இளம்வழுதி, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் பழனி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொள்ளாமூர் டி.வி.குமார், பாப்பாஞ்சாவடி வீரமுத்து, பாசறை ஒன்றியச் செயலர் வீரப்பன், விவசாய அணி ஒன்றியச் செயலர் பெருமாள், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com