பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை க.சுமதி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை எஸ்.அசினா, பட்டதாரி ஆசிரியை அ.விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியை இ.சரளா வரவேற்றார்.
விழாவில் வகுப்பறை, கழிப்பறை, கரும்பலகை, விளையாட்டுத் திடல், பள்ளி வளாகம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி, பராமரித்து வரும் 9-ஆம் வகுப்பு மாணவிகளுக்கும், காலாண்டுத் தேர்வில் 11, 12-ஆம் வகுப்பில் உயிரியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் சிறப்பிடம் பெற்ற முதல் 10 மாணவிகளுக்கும், மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்து வரும் மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவரும், பள்ளி முதுகலை ஆசிரியருமான தா.சம்பத் மாணவிகளைப் பாராட்டிப் பேசினார். முதுகலை ஆசிரியர் மாதேஸ்வரன், பட்டதாரி ஆசிரியர்கள் கிருஷ்ணன், கோவிந்தன், சத்யா, சண்முகப்பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பசுமைப்படை ஆசிரியர் மூ.முத்து நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com