திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் வருகிற 26ஆம் தேதி காலை 11 மணி அளவில் சார்-ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. சார்-ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மலையனூர் வட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாயப் பிரதிநிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சார் ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.