சித்தலூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி வட்டம் சித்தலூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி மகத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி வட்டம் சித்தலூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி மகத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் மாசி மகத் திருவிழா கடந்த பிப்-13-இல் கொடியேற்றத்துடன்தொடங்கியது. 9ஆவது நாளான புதன்கிழமை மயானக்கொள்ளை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 அ.பிரபு எம்.எல்.ஏ வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். உடன் தியாகதுருகம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் வெ.அய்யப்பா, கள்ளக்குறிச்சி கூட்டுறவு விவசாயி வங்கியின் தலைவர் அ.ரங்கன், நாகலூர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சித்தலூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ், அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் தி.ராஜவேலு, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, அண்ணா தொழிற் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றுó கிராம மக்கள் பங்கேற்றனர்.
 தேர் கோயிலை சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது. கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.கோமதி தலைமையில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் டி. விஜயகுமார், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com