விழுப்புரத்தில் காங்கிரஸ் சார்பில் கட்சியினருக்கு பொங்கல் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தைப்பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்டத் தலைவர் ஆர்.டி.வி.சீனுவாசகுமார் தலைமை வகித்து, கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி, ஏலம், திராட்சை உள்ளிட்ட பொங்கல் பொருள்களை வழங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் தயானந்தம், நகரத் தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, பாலன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், துணைத் தலைவர்கள் ராஜமாணிக்கம், ராஜேஷ், ராமகிருஷ்ணன், பொதுச் செயலர் வேலு, மதியழகன், நாராயணசாமி, சேகர், மகளிர் காங்கிரஸ் மகேஷ்வரி, விட்டோபாய், வட்டாரத் தலைவர்கள் ராதா, காமராஜ், அன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.