விழுப்புரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ராமகிருஷ்ணா கல்விக்குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்விக்குழுமச் செயலாளர் கே.பழனிவேல் வரவேற்றார்.
பள்ளி முதல்வர் ஆர்.பாட்சா தலைமை வகித்தார். சாலாமேடு ராமகிருஷ்ணா பள்ளி முதல்வர் கே.பெரியதுரை தொடக்க உரையாற்றினார் .
பெங்களூரு அல்சூரைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி வீத்தபயானந்தாஜி மகராஜ், வாரனாசி ராமகிருஷ்ணா மிஷன் சேவை இல்ல நிர்வாகி ஸ்ரீமத் சுவாமி பிரமுக்தானந்தாஜி மகராஜ், சென்னை டி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமி பத்மஸ்தானந்தாஜி மகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று ஆசியுரை வழங்கினர்.
தொடர்ந்து, மாணவர்களின் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்களுக்கு இளைஞர் தின போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ராமகிருஷ்ணா பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.