கள்ளக்குறிச்சி அருகே சாராய வியாபாரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கச்சிராயாப்பாளையம் அருகே உள்ள கரடிச்சித்தூரைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் குபேந்திரன்(45). சாராய வியாபாரியான இவர், அந்தப் பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்று வந்தார். தொடரும் இவரது குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் வகையில், இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பரிந்துரைத்திருந்தார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், குபேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. குபேந்திரனை சனிக்கிழமை கைது செய்த கச்சிராயாப்பாளையம் போலீஸார், அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.