ஜனநாயக வாலிபர் சங்க ஆர்ப்பாட்டம்

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை இணைந்து செய்யூர் பஜார் வீதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
 ஓதியூர் போலிச் சாமியார் ஸ்ரீதரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்; பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக செய்யூர் பஜார்வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சித்தாமூர் பகுதி வட்டச் செயலர் க.சத்யா தலைமை வகித்தார்.
 ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டச் செயலர் ஆர்.ரேணுகா வரவேற்றார். இதில், ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் வி.பிரமீளா, வி.ஜெயந்தி, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி.புருஷோத்தம்மன், ம.பா.நந்தன்உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டத் தலைவர் கே.பவானி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com