ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை

கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் அருகே கடன் வாங்கி மது அருந்தி வந்த ஆட்டோ டிரைவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 


கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் அருகே கடன் வாங்கி மது அருந்தி வந்த ஆட்டோ டிரைவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
கூடுவாஞ்சேரி தைலாவரம் புவனேஸ்வரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்(35). ஆட்டோ ஓட்டுநரான அவர் தினமும் கடன் வாங்கி மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com