காஞ்சிபுரம்
கட்டுமான விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
கட்டுமான விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ஆட்சியர் பா.பொன்னையா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
கட்டுமான விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ஆட்சியர் பா.பொன்னையா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கந்தன்சாவடி பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது அண்மையில் விபத்து ஏற்பட்டது. இதில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ராஜன் சௌத்ரி பலத்தகாயமடைந்தார். பின்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
அவரது வாரிசுதாரரான மனைவி லலிதாதேவிக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ.5 லட்சம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அப்போது, தொழிலாளர் நல உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.