ஒரத்தூர் பகுதி பொதுமக்கள் சார்பாக அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குன்றத்தூர் ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஒரத்தூர் பகுதி பொதுமக்கள் சார்பாக அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் என்.டி.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வனக்குழு தலைவர் சுபாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒரத்தூர் ஏரிக்கரை பகுதியில் 3 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.