சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 திருத்தணியை அடுத்த தேவலாம்பாபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் தரணி(44). இவர், கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த கோவிந்தம்மாளுடன் (35) வசித்து வந்தார். இந்நிலையில், அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த கோவிந்தம்மாளின் மகளிடம் தரணி அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு கோவிந்தம்மாளும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமி ஆர்.கே.பேட்டை போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.
 இதைத் தொடர்ந்து, தரணி, கோவிந்தம்மாள் இருவரையும் திருத்தணி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com