மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டிவிஎஸ் குழுமம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும், 10, 12 ஆம் வகுப்பை முடித்த ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில் தேர்வாகும் நபர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் உணவு, நிறுவன வசதிகளுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. அதன்படி, முகாமுக்கு வரும் நபர்கள் கல்விச்சான்று நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை நேரில் வரும்போது கொண்டுவர வேண்டும். எனவே, விருப்பமுள்ளவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.